Wednesday, February 29, 2012

மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


 மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்

பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில்கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

  மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.              ( இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

  எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (ல்குர்ஆன்4:19)


மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

 

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்; ‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி)

 

அலட்டிக்கொள்ளக்கூடாது:



 பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.



நிறைகண்டுநிம்மதிபெறுங்கள்!



மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(சுனனுல் குப்ரா)

 

தண்டிக்கும் அனுமதி:



நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும்பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

 

தண்டனை என்பதுமருந்துபோன்றதாகும்.நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

 

அடுத்தது, ‘தண்டித்தல்என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

 

இது குறித்துக்குர்ஆன்கூறும் போது; பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்.(ல்குர்ஆன்4:34)

 

அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.(முஸ்லிம்)

 

முறையற்ற தண்டித்தல்குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.

மற்றும் சிலர்தற்கொலைசெய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.

 

எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.

 

ஷரீஆவின் வரையறைகள்:



அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

 

எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல.தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாதுஎன்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:



(1) முகத்தில் அறையக் கூடாது. 



முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. முகத்தில் அறைய வேண்டாம்!என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)

 

(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:



சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.



(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:



நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!எனக் குறிப்பிடுகின்றார்கள்.

 

இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

 

(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:



மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.

 

(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:



தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.

 

(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்!(ல்குர்ஆன் 2:194)

 

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (ல்குர்ஆன்16:126)

 

மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?

 

மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.

 

அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.

 

இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.

 

எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (ல்குர்ஆன்3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.

 

இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது; ‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.



நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:



இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.

 

தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்து முள்ளார்கள்.

உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)

 

ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.

 

உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!(திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காரணங்களைக் கண்டறிவோம்:

 கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.

மனைவி தரப்பில்:



மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.



(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:



இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.

 

தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:



கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும்.

 

சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனையவேண்டும்.

(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:

பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.


(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:

மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

 

(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:

ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.

கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:

பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:



சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.

(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:

 மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும்திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர்.

இரண்டும் தவறானவைகளாகும்.

இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.

(3) தவறான பிள்ளைப் பாசம்:

ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.

எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.


இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.

பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.

(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:

 சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.

  பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.

 சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.

Tuesday, February 28, 2012

இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
CMN சலீம்

[ ஒரு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 3 இலட்சம் பொறியியல் படித்தவர்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். அதில் 10 ஆயிரம் மாணவர்களுக்குக் கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை.

ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை உருவாக்காமல், இந்திய அரசின் உயர்கல்வி கொள்கையும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி கொள்கையும் இந்தத் தனியார் கொள்ளைக் கூட்டத்தாரின் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது.

இன்றைய கல்வி முறை சாறு பிழியப்பட்ட சக்கையாக, மனிதநேயமற்ற ஒழுக்கமில்லாத சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கின்ற குற்றங்களில் 90 விழுக்காடு படித்த பட்டதாரிகளால்தான் நடைபெறுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் முறையான தரமான கல்வியை – சரியான காலத்திற்கு – இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

முறைப்படுத்தப்பட்ட கல்வியின் மூலம்தான் இறைவனையும் அவனது ஆற்றலையும் ஒவ்வொரு மனிதனும் உணர முடியும் என்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.]

இந்திய விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் வளர்ச்சியின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் பற்றும் பரிவும் கொண்ட நேர்மையான தலைவர்கள் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று மக்களுக்காகவே அற்புதமான திட்டங்களைத் தீட்டினார்கள். அதை செயல்படுத்துவதில் உண்மையான முனைப்புக் காட்டினார்கள். அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி வேகம் மிதமாக இருந்தாலும் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டார்கள். ஏனெனில் இந்திய விடுதலை என்பதே வெள்ளையரின் சுரண்டலிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்கும் இலட்சியத்திலிருந்துதான் பிறந்தது.

இந்தியாவின் இந்த நிலையான வளர்ச்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் நீடித்த வாழ்வும் நிலையான வளர்ச்சியும் நமது சுரண்டலுக்கு என்றைக்குமே ஆபத்து என்று உணர்ந்து இந்தியாவின் முக்கியமான துறைகளில் தங்களுக்கு சாதகமான ஆட்களை அமர்த்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான முன்முயற்சியைச் செய்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

தொடக்கத்தில் நேருவால் வடிவமைக்கப்பட்ட சோசலிஸ சமூக, பொருளாதார கொள்கையிலிருந்து திசைமாறி 1990-க்குப் பிறகு காங்கிரஸிலிருந்த அமெரிக்காவின் ஆதரவாளர்களால் முதலாளித்துவக் கொள்கைக்கு இந்தியாவின் சமூக, பொருளாதார கொள்கை மாற்றப்பட்டது. அன்றிலிருந்து உலகமயம், தாராளமயம் என்று இனிப்பு தடவப்பட்ட விஷம் இந்திய நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் முழுமையாகச் செலுத்தப்பட்டது.

1970-களில் அமெரிக்கப் பொருளியல் நிபுணர் சர். ஆர்தர் டங்கல் என்பவரால் பிற நாட்டு வணிகச் சூழலையும் வளங்களையும் மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான "டங்கல்" திட்டம் அறிமுகமானது. இதன் அடிப்படையில் உலக மயம் என்கிற சுரண்டலை நோக்கி உலகின் பல நாடுகளும் தள்ளப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் "காட்" (நிகிஜிணி) என்று அழைக்கப்பட்டது. சுய சார்பை நிர்மூலமாக்கும் இதன் சதி வலைகளால் நம் நாடும் சுற்றி வளைக்கப்பட்டது.

அப்போதிலிருந்து பாய்ச்சப்பட்ட விஷம் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்கி தற்போது அதன் வீரியங்கள் கொடூரமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. அதில் இந்திய மக்களை சுரண்டிவரும் முக்கிய துறைகள்தான் கல்வியும் சுகாதாரமும்.

கல்வி :

1834-இல் மெக்காலே என்ற வெள்ளையனால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற பொருள் சார்ந்த இந்தியாவுக்கான கல்வித்திட்டத்தில் 1990-க்குப் பிறகு தனியார் ஆதிக்கத்தை திறந்து விட்டதனாலும், அரசு தனது மக்களுக்கு கல்வி, சுகாதாரம் தடையின்றி கிடைக்கச் செய்யும் உன்னதமான பொறுப்பை தட்டிகழித்ததாலும், பொறுப்பற்ற அரசின் நிர்வாகத்தாலும் இன்று இந்திய மற்றும் தமிழக மக்களின் செல்வங்கள் பகிரங்கமாக கொள்ளை போய் கொண்டிருக்கின்றன.

உலகமயத்தின் விளைவாக பொருளாதாரம் தான் வாழ்வின் அதிமுக்கியக் குறிக்கோள் என்ற தத்துவம் மக்களின் மனதில் தொடர்ந்து ஆழமாகப் பதிக்கப்பட்டது. அதன் விளைவாக கவர்ச்சி மிகுந்த வாசகங்களுடன், கட்டிடங்களுடன், பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் படையெடுத்து மக்களின் சேமிப்பு, வருவாய் அனைத்தையும் அளவில்லாமல் அப்பட்டமாகச் சுரண்டி மக்களை கடன்காரர்களாக ஆக்கி வருகின்றனர்.

ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை உருவாக்காமல், இந்திய அரசின் உயர்கல்வி கொள்கையும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி கொள்கையும் இந்தத் தனியார் கொள்ளைக் கூட்டத்தாரின் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு தற்போது அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்கள் கடையை விரிக்க சட்டப்பூர்வ அனுமதியும் கொடுத்தாகிவிட்டது.

1995-க்குப் பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் புற்றீசலாய் அதிகரிக்கத் தொடங்கின. அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை செய்து கொடுக்கும் மிஜி நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகத் தொடங்கியவுடன் இதில் பணியாற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு தொடக்கமே 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்று அறிவிப்புகள் வெளியானவுடன் பொறியியல் கல்லூரிகள் பெருகத் தொடங்கின. அதில் நிர்வாக கோட்டாவில் ஒரு சீட்டுக்கு 2 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை பழிபாவத்திற்கு அஞ்சாமல் நன்கொடை கேட்டனர்.

எங்கள் காலேஜில் படித்தால் 20 ஆயிரம் சம்பளத்தில் அனைவருக்கும் உடன் வேலை கிடைக்கும் என்று பச்சைப் பொய்யை பகிரங்கமாக அள்ளிவிட்டனர். மக்களும் அதை நம்பி வெறிபிடித்தார்போல தங்களது பிள்ளைகளைச் சேர்த்தனர். இறுதி ஆண்டு படிக்கும்போதே வேலை கிடைக்கிறது என்றவுடன் இன்னும் பித்தம் தலைக்கேறி சூழ்ச்சி விளங்காமல் என்ன விலை கொடுத்தேனும் பெரிய கல்லூரிகளில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் மனநிலை மாறிப்போனது. மக்களின் மாற்றப்பட்ட இந்த மனநிலைஆயை தனியார் கல்லூரிகள் சரியாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்தனர்.

கள்ளச்சாராயம் விற்றவர்கள், நிலச்சுவான்தார்கள், கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், கடத்தல்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள் என கல்வித் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பலரும் இந்தக் கொள்ளை லாபத்தைப் பார்த்து புதிய கல்லூரிகளைத் தொடங்கினார்கள். புதிய கல்லூரிகள் தொடங்கிட உரிமம் வழங்குவதற்கு தமிழகம் தொடங்கி டெல்லி வரை பல இலட்சங்கள் லஞ்சமாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பெற்றனர். சில இடங்களில் அரசியல்வாதிகளே பினாமி பெயரில் அதிகம் கல்லூரிகள் தொடங்கினர்.

உலக அளவில் சமீப காலமாக ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் காற்று போன பலூன் போல சாயம் வெளுத்து குப்புற விழுந்தவுடன் அமெரிக்காவை நம்பியிருந்த இந்திய மிஜி நிறுவனங்களின் சாயமும் வெளுத்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போன்ற பல நிறுவனங்களின் உண்மை முகம் வெளியே தெரிந்தது. ஆனாலும் மக்களிடம் பொறியியல் படிப்பின் வெறி மட்டும் குறையவில்லை. பணம் சம்பாதிப்பது மட்டும் தான் தங்கள் பிள்ளைகளின் தலையாய வேலை என்ற சிந்தனை மூளையில் தொடர்ந்து திணிக்கப்பட்டது. பெற்ற பிள்ளையை பணம் காய்க்கும் மரமாக, பணமீட்டும் எந்திரமாகப் பார்த்தனர்.

வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகள் பொறியியல் படிக்கத் தேவையான 4-5 இலட்சத்தை (நன்கொடை இல்லாமல்) செலவு செய்கின்றனர். அவர்களை இது பெரிதாக பாதிக்கவில்லை. அவர்களைப் பார்த்து நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமும் தூண்டப்பட்ட பொருளாதார ஆசையின் காரணமாக பொறியியல் படித்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என்ற தனியார் நிறுவனங்களின் தவறான விளம்பரத்தைப் பார்த்து கிராமப் புறத்திலிருந்து வரும் 45-50 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துவிட்டனர். அரசு நிர்ணயம் செய்த 33,500 ரூபாய் கல்விக் கட்டணத்தைக் கூட அவர்களால் கட்ட முடியாமல் வியர்வை சிந்தி சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த நகை, பாரம்பர்ய சொத்து, வீடு, வாசல் என்று எல்லாவற்றையும் விற்றுவிட்டு கடன்காரர்களாக தெருவிற்கு வந்ததுதான் மிச்சம்.

கல்விக் கட்டணத்தைக் கட்ட இயலாமல் போனதால் தனியார் கல்வி நிறுவனங்களின் நெருக்குதலாலும் பிள்ளைகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியதாலும் அவமானம் தாங்காமல் பலர் தற்கொலை செய்துள்ளனர். பொறியியல் படித்தால்தான் வேலை என்ற நிலை எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. புற்றீசல் போல முளைத்த தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் பயின்று வருவதால் மாணவர்களிடம் கல்வித்திறனும் குறைவாக இருக்கிறது. தரமற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி, நாடே தலை குனிந்தது.

ஒரு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 3 இலட்சம் பொறியியல் படித்தவர்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். அதில் 8 ஆயிரம் மாணவர்களுக்குக் கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை. சென்னை தெருக்களில் பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடி அலையும் அவலத்தை கண்கூடாகப் பார்க்க இயலும். இது குறித்து தினமணி நாளிதழில் விரிவான தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. கூரியர் நிறுவனங்கள், சேல்ஸ்மேன் வேலை, ஓட்டல் சர்வர், ஆட்டுப் பண்ணை எனப் பலவாறு காலம் தள்ளுகின்றனர் பொறியியல் பட்டதாரிகள்..

மேலாண்மைக் கல்வி :




பொறியியல் கல்லூரிகள் அடிக்கும் கொள்ளைக்கு சற்றும் குறைவில்லாமல் கோட்டு சூட்டு மாட்டச் சொல்லி மடிக் கணினி கொடுத்து லட்சம் லட்சமாக மாணவர்களிடம் சுரண்டும் மற்றொரு படிப்புதான் மேலாண்மைக் கல்வி.

சிலருக்கு சில குறிப்பிட்ட கல்விநிறுவனங்களில் படித்தால் மட்டும் நல்ல வேலை கிடைக்கிறது என்பது உண்மை. அதை பொது விதியாக்கி பட்டித் தொட்டி எங்கும் மேலாண்மைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்களிடம் ஆசை தூண்டப்படுகிறது. இதனால் பெற்றோரின் பரம்பரைச் சொத்துக்கள் எல்லாம் வங்கிக்கும் வட்டிக் கடைக்காரனிடமும் அடகு வைக்கப்படுகின்றன.

பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களும் எந்த ஒரு பாடத்தையும் படிப்பையும் அறிமுகம் செய்வதற்கு முன்பு அந்தப் படிப்பிற்கு சந்தையில் எந்த அளவிற்கு டிமாண்ட் உள்ளது? மாணவர்களிடம் வரவேற்பு இருக்குமா? வியாபாரம் நன்றாக நடக்குமா? என்று தான் சிந்திக்கின்றனர். அரசின் பல்கலைக் கழகங்கள்கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது.
தெளிவும், தீர்க்கமான கொள்கையும் இல்லாத அரசுகள், அமெரிக்காவின் சட்டதிட்டங்களையும் அதன் அடிமைகளாக உலா வரும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளையும் நம்பி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை தொழில்நுட்பக் கல்வி என்ற பெயரால் காலம் முழுவதும் கடன்காரர்களாக மாற்றிவிட்டன. மாற்றியும் வருகின்றன.

உயர்கல்வியை சமூக விடுதலைக்கான தீப்பொறியாக, அறியாமை இருள் அகற்றும் ஒளிவிளக்காக, வறுமை ஒழிக்கும் ஆயுதமாக மாற்றியிருந்தால் அதன் அடிப்படையில் பாடங்களும் திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தால் இன்றைய இந்தியா ஊழல் அற்ற, லஞ்ச லாவண்யம் அற்ற, நேர்மை யான மக்கள் வாழும் நாடாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியும்.
ஆனால் இன்றைய கல்வி முறை சாறு பிழியப்பட்ட சக்கையாக, மனிதநேயமற்ற ஒழுக்கமில்லாத சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கின்ற குற்றங்களில் 90 விழுக்காடு படித்த பட்டதாரிகளால்தான் நடைபெறுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல மனித இனத்திற்கு பயன்தரும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளும், இயற்கை வழியிலான வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆய்வுகளும் முறையாக நடைபெற்றிருந்தால் நமது தொழில் நுட்பங்களையும் வழிகாட்டுதலையும் பல நாடுகளும் பின்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கும். அதில் மனித குலமும் இந்த பூமியும் பயன்பெற்றிருக்கும். ஆனால் இவை எல்லாம் வல்லூறுகளுக்கு பிடிக்காதே! ஆதிக்க வெறியர்களுக்கு பிடிக்காதே!

நம்மைச் சிந்திக்க விடாமல் வைத்திருந்தால் தான் அவர்கள் சுருட்ட இயலும் என்பதால் இன்றைக்கு இந்திய உயர்கல்வியை – இந்தியர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்கிறது. இந்தப் போக்கு நம்மை சீரழிவிற்கு கொண்டுச் சொல்லும். இதை மாற்றிட நாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்து விடக்கூடாது என்பதற்குத்தான் டாஸ்மாக், மானாட மயிலாட, சினிமா, சீரியல் என்ற "போதை மருந்துகள்".

பணத்திற்காக வேகம் எடுத்து கண்மண் தெரியாமல் ஓடும் இன்றைய வாழ்வில், வாழ்க்கையின் இனிமையான காலங்களை, அதன் விழுமியங்களை பணம், பகட்டு, சொகுசு வாழ்க்கை என்பவற்றிற்கு பறிகொடுத்துவிட்டு நிற்கின்றோம். இதுதான் மெக்காலே 1834-ல் அறிமுகப்படுத்திய பொருள் சார்ந்த கல்விமுறை. 150 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திவிட்டு இப்போது வீரியம் எடுத்து மக்களைக் காவு வாங்குகிறது.

மாற்றுத்திட்டம் :





இதற்கு தீர்வு எதுவாக இருக்க முடியும் என்பதை நடுநிலையாளர்கள், மூத்த கல்வியாளர்கள் உலகின் எல்லா சித்தாந்தங்களையும் ஆய்வு செய்திட வேண்டும். குறிப்பாக இஸ்லாம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

மனிதன் இந்த பூமியில் வாழ்ந்திட வரையறுக்கப்பட்ட கால அளவைக் கொண்டுள்ளான். எந்த நேரமும் மரணம் காத்திருக்கிறது. வாழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட கால அளவையில் அவன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் கடமைகளும் ஏராளம் இருக்கின்றன என்று இஸ்லாம் கூறுகிறது. இவற்றை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும் அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் முறையான தரமான கல்வியை – சரியான காலத்திற்கு – இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

முறைப்படுத்தப்பட்ட கல்வியின் மூலம்தான் இறைவனையும் அவனது ஆற்றலையும் ஒவ்வொரு மனிதனும் உணர முடியும் என்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

அதனால்தான் கல்வி கற்பதை இறைவனுக்கு செய்கின்ற வணக்கம் என்று இஸ்லாம் விளக்குகிறது. அதேபோல முஸ்லிம் அரசன் என்பவன் (கலீஃபா) இந்த பூமியில் இறைவனுடைய சட்டத்தை அமல்படுத்தும் பிரதிநிதியாக செயல்படுகிறான். சட்டங்கள், கொள்கைகள் வகுப்பதற்கு அரசனுக்கு அனுமதி கிடையாது. அது இறைவனுக்கு மாத்திரம் உள்ள உரிமைகள்.

இறைவன் வகுத்ததை நடைமுறைப் படுத்துவதுதான் அரசன் எனும் ஊழியனின் வேலை. அதாவது இஸ்லாமிய அரசின் வேலை.
குடிமக்களின் வாழ்விற்கும் வழிமுறைக்கும் அரசனே பொறுப்பாளி. நல்ல ஒழுக்கத்துடன் கூடிய பண்பாடு மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அரசனின் பொறுப்பு. ஏழை எளிய மக்கள், செல்வந்தர்கள், ஆண்-பெண், குழந்தைகள், விதவைகள், ஆதரவற்றோர் என குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளங்களில் சம உரிமை படைத்தவர்கள். இன்றைக்கு நம் நாட்டில் வளங்கள் எல்லாம் ஒரு சிலரால் அனுபவிக்கப்படுவதையும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

இஸ்லாமிய அரசில் வறுமை அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆட்சிமுறை, குடிமக்கள் குறித்து மறுமையில் இறைவனிடம் அரசன் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாமிய அரசின் அல்லது முஸ்லிம்களின் ஆட்சியில் இதனடிப்படையில்தான் கல்விக் கொள்கை உருவாக்கம் பெறுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சியில் உயர்கல்வி நல்ல குடிமக்களை, நீதியாளர்களை, நிர்வாகத் திறன் படைத்தவர்களை, தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்கான தனிப்பெறும் ஆயுதமாக கையாளப்பட்டது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக திகழ்ந்ததற்கான காரணம் இதுதான்.
பள்ளிவாசலில் அமையப் பெற்றிருந்த மதரஸாக்கள் எனும் உயர்கல்வி நிறுவனத்தை அரசே நடத்தியது. இறைபக்தி மிகுந்த செல்வந்தவர்களும் இந்த கல்வி நிறுவனத்திற்கு வாரி வாரி வழங்கினர்.

ஒழுக்கமும் பண்பாடும் இறையச்சமும் நிறைந்த அறிவு ஜீவிகளைக் கொண்ட நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்; குற்றங்கள் குறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அரசின் கல்விக் கொள்கையாக இருந்தது. இன்றைய தவறான கல்விக் கொள்கைதான் குற்றங்கள் அதிகரித்திட மூலகாரணமாக அமைந்துள்ளது.

உயர்கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மத வேறுபாடு இல்லாமல் அரசின் சார்பிலும் வசதி படைத்தவர்கள் சார்பிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இன்றைக்கு நேர்மாற்றமாக மாணவர்களிடம் இருந்து அவனது ஆதி அந்தம் என அனைத்தையும் பிடுங்கும் அவலம் நிலவுகிறது.

ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. சில ஆசிரியர்கள் கற்பித்தலை இறைவனுக்குச் செய்கின்ற சேவையாகக் கருதி இலவசமாகப் பணியாற்றினார்கள். இன்றோ ஊதியமும் ஊக்கத்தொகையும் போதவில்லை என்று அன்றாடம் ஆசிரியர்கள் கொடிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். மறியலில் ஈடுபடுவதைக் காண்கின்றோம்.

வரலாற்றில் உலக அளவில் உயர்கல்வி என்ற அறிவின் ஆழமான வடிவத்தை அடையும் பாதையை உலகிற்கு காட்டித் தந்தவர்கள் முஸ்லிம்கள்தான். நாங்கள் தான் இன்றைக்கு உயர்கல்வியில் மிகைத்திருக்கின்றோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த வரலாற்று உண்மைகளை மறுக்கமாட்டார்கள். மறுக்கவும் முடியாது.

8-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய நிலப்பரப்பில் அமையப் பெற்றிருந்த "ஜாமிஆ" எனும் உயர்கல்விக்கான பல்கலைக்கழகத்தைப் பார்த்த பிறகு 500 ஆண்டுகள் கழித்து ஐரோப்பாவில் 12-ஆம் நூற்றாண்டில்தான் முதன்முறையாக ஆக்ஸ்ஃ
போர்டும் கேம்பிரிட்ஜும் உருவானது. அவற்றுக்கான பாடங்களைக் கூட அரபு மொழியிலிருந்துதான் லத்தீன் மொழிக்கு துறைவாரியாக மொழியாக்கம் செய்தார்கள்.

மனித வாழ்விற்குத் தேவையான பண்பாடு, ஒழுக்கம், சமநீதி போன்ற அடிப்படைக் காரணிகளோடு அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் அனைத்திற்கும் முன்னோடிகளாக – அனைத்தையும் மேற்கத்திய மக்களுக்கு ஒளிவுமறைவு இல்லாமல் கற்றுக் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதிலும் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. ஈடுபடக்கூடாது என்று இஸ்லாம் ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. ஆனால் இன்றோ மனித இனத்தின் அழிவிற்கும், இயற்கையின் அழிவிற்கும் தேவையான அத்துனை நடவடிக்கைகளும் பகிரங்கமாக வளர்ச்சி என்ற பெயரில், உயர்கல்வி என்ற பெயரில் நடைபெறுகிறது. பணம் கிடைக்கிறது, சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது என்பதற்காக படித்தவர்களும் பட்டதாரிகளும் கூட மண்ணும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று அமெரிக்க மோகத்தில் அத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல குடும்ப இயல் வாழ்விற்கு இஸ்லாமியக் கல்வி அதிமுக்கியத்துவம் கொடுக்கிறது. குடும்பங்கள் சிதைந்தால் சமுதாயமே சிதைந்துவிடும். ஆனால் குடும்பத்தைப் பார்க்கக்கூட நேரமில்லாமல் "மாடர்ன்" வாழ்க்கை என்ற மோகத்தில் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைய தலைமுறை பறந்து ஓடுகிறது. திருமண உறவு முறைகள் சிதைக்கப்பட்டு, ஓரினச் சேர்க்கை ஊக்கப்படுத்தப்படுகிறது. கூட்டுக் குடும்பம், விட்டுக் கொடுத்து வாழ்வது, குழந்தைகளின் நலனிற்கான வாழ்க்கை என்பதெல்லாம் இன்று கேலிக்குரிய பேச்சாக மாறிப் போய் உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சீர்கெட்டுப் போய் விவாகரத்துகள் பெருகி வருகின்றன.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டிய முஸ்லிம்களுக்கும் முதலாளித்துவச் சிந்தனை மூளையில் பதிக்கப்பட்டு தங்களுக்கான கல்விமுறைகளையும் வாழ்வியல் நெறிகளையும் மறந்து பணத்தைத் தேடுவதற்கு என்ன வழி என்று மட்டும் சிந்திக்கின்றனர்.

தங்களின் வேர்கள் வீரியம் இழந்து வருவதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை. இந்த பூமியில் முஸ்லிம்களுக்கான கடமை என்னவென்றே தெரியாமல் ஆக்கும் கல்விமுறையில் படித்து வரும் அவர்களாலும் என்ன செய்ய இயலும்? தாங்கள் செல்லுகின்ற பாதை வெல்லுகின்ற பாதை தானா என்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். ஏன் என்றால் அவர்களைப் பார்த்து பணம் மட்டும்தான் வாழ்க்கையா? என்று இஸ்லாம் கேட்கிறது. நல்லவர்கள், நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களும் கேட்கின்றனர். நாளை மறுமை நாளில் இறைவனும் கேட்பான் என்பதும் உறுதி